Saturday, May 9, 2009

சுவாமி சுகபோனந்தா அறிவுரை. . .

* வாழ்க்கை பல சமயங்களில் நியாயமானது. சில சமயங்களில் அநியாயமானது.

* நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். உலகம் தானாகவே மாறும்.

* எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வதுதான் அன்பு. எதையும் தவிர்ப்பதல்ல அன்பு.

* சுதந்திரம் என்பது பிணைப்புகள் இல்லாமல் இருப்பது அல்ல. பிணைப்புகள் இருந்தாலும் செயல்படுவது. சுதந்திரமாக செயல்படுங்கள் பிணைப்புகளையும் மதியுங்கள்.

* ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அல்லது விலக்க வேண்டுமானால் மனதை அதற்கு தயார்படுத்துவது அவசியம்.

* பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.

* சிறுத்தையின் புள்ளிகள் மாறாது.

* நேர்மை பலன்தரும். சிலருக்கு அது தரும் பலன் போதுமானதாகத் தோன்றுவதில்லை .

* கணக்கிட்டு அன்பு செய்பவன் நம்பக்கூடிய நண்பனல்ல.

* மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்.

* தோற்போம் என்ற பயமே தோல்வியின் தந்தை.

* சிலர் சந்தோசத்துக்காக வேலை செய்வார்கள். அறிவுடையோர்க்கு வேலை எதுவானாலும் சந்தோஷமே.

0 comments:

Post a Comment