Friday, May 15, 2009
வி.பி.சிங்
வி.பி.சிங் அவர்கள் தனது 11 மாத ஆட்சிக் காலத்தில் கீழ்தட்டு மக்களுக்காக பாடுப்படடவர். இதற்காகவே அவர் ஆட்சியை பி.ஜெ.பி. கவிழ்த்தது. பி.ஜெ.பி. செய்த சாதனைகளுள் இதுவும் ஒன்று.
அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து, கைது செய்ததும் வி.பி.சிங் அவர்களே. இதற்காகவே அவர் அரசை கவிழ்த்தனர்.
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்படுவதற்கு வி.பி.சிங் அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எதிராக 346 வாக்குகள் பதிவாயின.
டெல்லியில் குடிசை வாழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்.
இன்னும் தொடரும். . .
Tuesday, May 12, 2009
நரேந்திர மோடி
இந்தியாவின் ஒரே மதம் இந்து மதம்தான் என்பதைச் செயல்படுத்துபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
பதவி ஏற்றதும், குஜராத் மலை மாவட்டங்களின் மாதா கோயில்களை இடித்து அங்கே அனுமன் ஆலயங்கள் எழுப்பினர். கன்னிகாஸ்திரீகள் களங்கப்படுத்தப்பட்டனர் .
'குஜராத் ஓர் இந்து ராஜ்யம்' என்று எல்லை அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டன.
'குஜராத்தில் நீதி உறங்கிவிட்டது. வகுப்புப் கலவர வழக்குகளை வேறு மாநிலத்தில்தான் நடத்த வேண்டும். கொடுங்கோலன் நீரோ மன்னனைப் போல, மோடி நடந்துகொள்கிறார்' என்று பெஸ்ட் பேக்கரி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
பொடா சட்டத்தின் கீழ் 300 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று மாத மதக் கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியானாலும் ஒரே ஒரு இந்துத்வா ஆசாமிகூட கைது செய்யப்படவில்லை.
மோடியை பதவியை விட்டு இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவர் குஜராத்தில் செயல்படுத்திய இந்துத்துவா திட்டங்கள், செய்த கலவரங்கள், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை அடித்து நோறிக்கியது ஆகியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் பிடித்த செயல் திட்டங்கள்.
இந்திய முழுக்க 'குஜராத்துகளை' நடத்தினால்தான் 'இந்து ராஜ்யத்தை' அமைக்க முடியும் என்பது அவர்களின் நோக்கம். அதை மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
பி.ஜே.பி சிறு குறிப்பு
ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பற்றி சிந்திக்காமல், பாடத்திட்டங்களை மாற்றுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக சங்பரிவார அமைப்புகளைத் தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு தேசத்தின் அமைதியையும், மக்களின் மன ஒற்றுமையும் சிதைக்கும் செயலிலே கவனம் செலுத்தினர்.
இன்னும் பார்ப்போம் . . .
மதம்
மக்களை தரம் பிரித்து வகுப்பினராக இழிவுப்படுத்துகிற எந்த வேதமும் கடவுள் சொன்ன வேதம் அல்ல.
இறைவன்
பகவத்கீதை
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும், முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோரிடத்திலும், பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ என்னிடம் வருவார்கள்.
- பகவத்கீதை (9:25)
பைபிள்
நானே தேவன். எனக்கு சமானன் இல்லை.
- ஏசாயா (46:9)
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
- உபாகமம் (6:4)
குர்ஆன்
உங்களுடைய இறைவன் ஒரே இறைவன் தான்.
- திருக்குர்ஆன் (16:20)
Sunday, May 10, 2009
பெரியார் சிந்தனைகள்
* மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதிக்காதவன், தன் உரிமை போகிறதே என்று கூறுவது எந்தவிதத்தில் யோக்கியமான காரியமாகும்.
ஜென் தத்துவங்கள். . .
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.
மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.
இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.
தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.
தன்னைப் போல் பிறரையும் நேசி.
எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.
இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.
ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.
சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
அறியாமை
அறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.
நான்
'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம்
மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.
காலம்
காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.
கடவுளின் பெயரில் கொலைகள். . .
மதச்சார்பற்ற அரசு
தமிழ்நாட்டின் நிலவரம். . .
* எழுபதுகள் வரை தமிழ்நாட்டில் மது விலக்கு அமலில் இருந்தது.
* கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மதுவினால் அரசுக்கு கிடைத்த லாபம் 4000 கோடி. இந்த ஆட்சியில் 8400 கோடியாக உயர்ந்துள்ளது.
Saturday, May 9, 2009
அரசியல் ஓர் அறிமுகம் . . .
* தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில், பெரும்பாலான காலம் ஆட்சிப் பொறுப்பு பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள் வசம்தான் இருந்திருக்கிறது.
* அரசியல்வாதிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?
மூன்று தகுதிகள்தான். மக்களின் நிஜமான தேவைகள் என்ன அந்த அவர்களுடன் நெருங்கிப் பழகி அறியும் ஆற்றல். அதை நிறைவேற்ற வேண்டிய நிர்வாக இயந்திரத்தைச் செயல்பட வைக்கும் துடிப்பு. அந்தச் செயல்பாட்டில் நேர்மை.
* தன்னை விமர்சிப்பவன் எதிரியின் நண்பன் என்றும், எதிரியை விமர்சிப்பவன் தன் நண்பன் என்றும் குழப்பம் அரசியல் சூழலில் நிலவுகிறது.விவாதம். . .
சுவாமி சுகபோனந்தா அறிவுரை. . .
* நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். உலகம் தானாகவே மாறும்.
* எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வதுதான் அன்பு. எதையும் தவிர்ப்பதல்ல அன்பு.
* சுதந்திரம் என்பது பிணைப்புகள் இல்லாமல் இருப்பது அல்ல. பிணைப்புகள் இருந்தாலும் செயல்படுவது. சுதந்திரமாக செயல்படுங்கள் பிணைப்புகளையும் மதியுங்கள்.
* ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அல்லது விலக்க வேண்டுமானால் மனதை அதற்கு தயார்படுத்துவது அவசியம்.
* பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.
* சிறுத்தையின் புள்ளிகள் மாறாது.
* நேர்மை பலன்தரும். சிலருக்கு அது தரும் பலன் போதுமானதாகத் தோன்றுவதில்லை .
* கணக்கிட்டு அன்பு செய்பவன் நம்பக்கூடிய நண்பனல்ல.
* மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்.
* தோற்போம் என்ற பயமே தோல்வியின் தந்தை.
* சிலர் சந்தோசத்துக்காக வேலை செய்வார்கள். அறிவுடையோர்க்கு வேலை எதுவானாலும் சந்தோஷமே.
Friday, May 8, 2009
தலைப்புகள்
அதற்கான வேலைகள் துவங்கி விட்டன.
மிக விரைவில். . .